Search This Blog

Monday 1 April 2019

மின்னல்

குறி மே 2019 இதழில் வெளியான கதை


மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. யாருக்கு வேண்டும் இந்த மழை..?  போய் கிராமத்தில் கொட்ட வேண்டியதுதானே..? விவசாயமாவது செழிக்கும். ஆனால் மழைக்கு கிராமம், நகரம் என்று வரையறை ஏதேனும் உள்ளதா என்ன..? அல்லது எல்லாமே வரையறைக்குள்தான் நடக்கிறதா..? நினைவுகளின் அழுத்தத்தில்  உடலில் பாரம் ஏறியது போலிருந்தது. அதற்காக இப்படியே படுத்திருக்கவும் முடியாது. கசகசப்பான ஈரம் உடலில் குளிராக ஏறிக் கொண்டிருந்தது. சுவரின் காரைப்பெயர்ந்த பொத்தலில் கையை நுழைத்து, அதன் விசையில் உடலை எழுப்பிக் கொண்டான் அவன்.