எழுத்தாளர் கலைச்செல்வியின் கதைகள் குறித்து..
பிரசவ வெளி கதையை முன்வைத்து....
பிரசவ வெளி கதையை முன்வைத்து....
ஆண் பெண் பேதம் எழுத்திற்கு இல்லை,தான் ஒரு பெண் என்பதற்கான எந்தச் சலுகையையும்,எழுத்துலகம் தனக்குத் தரவேண்டியதில்லை..என்று திடமாக நம்புபவர் கலைச்செல்வி.ஆனால் இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். இவர் எழுதிய பிரசவவெளி
...என்ற கதை,எல்லா ஆண் எழுத்தாளர்களும் சேர்ந்து எழுதினாலும் எழுத முடியாத கதை. பொதுவாக ஜனனத்தையும்,மரணத்தையும் எழுதும் படைப்புகளில்ஒருவிதமான நேர்பொருளற்ற வாக்கியங்களின் உலவலை,நவீனத்துவம் என்ற பெயரில் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இதற்கு புதுமைப் பித்தனின் சென்னை நகரத் தெருவில் இறந்து கொண்டிருந்தவனின் கதை கூட விலக்கல்ல..ஆனால் சிறு குழந்தையைக் குறியீடாக்கியதன் மூலம் அந்த பூடகத்தை வென்றுவிடுகிறார் பு.பி. ஆனால் கலைச்செல்வி இத்தகு இடத்தை அனாயாசமாகக் கையாள்கிறார்..செவ்வியல் போக்கின் பலத்தையும்,நவீனப் போக்கின் பலத்தையும் எடுத்து தனதாக்கிக் கொள்ளும் ஒரு தனி நடையைக் கட்டமைக்கிறார். ஒரு பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் நுழைவது முதல் ,குழந்தையோடு வீட்டில் ஆயாசமாகப் படுப்பது வரை எந்த தருணத்தின் துளியும் விடுபடாமல் வடித்து எடுக்கிறார்...பெண்கள் தங்கள் உடல்மொழியின் அப்பட்டத்தால் படைப்பை ஆபாசமாக்குகிறார்கள் என்று குட்டி ரேவதி யிலிருந்து எதிர்கொண்டுவரும் கருத்தியலுக்கான நேர்மைத்திற பதிலாக இக்கதையை எடுத்துக்கொள்ளலாம்.