பெரியாயி சிறுகதை குறித்து தஞ்சை ஹரிணியின் விமர்சனம்
வாசிப்புத் தொடங்கிய காலந்தொட்டு மண்சார்ந்த கதைகள் நிரம்பப் பிடிக்கும். அதன் இயல்புத் தன்மையை நாம் சித்திரிப்பு செய்யமுடியாது. அனுபவிக்கலாம். அனுபவித்ததை அப்படியே சொல்லலாம். இதுபோன்ற கதைகளை வாசிக்கும்போது இயல்பான உரையாடலில் தொடங்கி இயல்பாகவே முடியுமென்றாலும் அது மனத்தைக் கசிய வைக்கும். இன்றைக்கும் இப்படித்தான் கிராமத்தின் மண்மனிதர்களின் வாழ்வியல் இருக்கிறது எனும்போது நாம் முழுமையாக நிறைவுபெற்ற மானுட சமுகத்தினை அடையவில்லை என்பது உறுத்தும்.
உறவுகளை அழைக்கிற சுகத்தைப் பற்றி தனியொரு கதை எழுதலாம். பெரியம்மா. சின்னம்மா. ஆத்தா, அம்மாயி, அப்பாயி, தாத்தா, சித்தி, அத்தே, சின்னாயி, பெரியாயி இப்படி அழைப்பதில் இழையும் அன்னியோன்யம் கொடுக்கும் சுகத்தை சிறுகதை போன்ற இலக்கியப் படைப்பில் குறைவற அனுபவிக்கலாம்.
இந்த வாரக் கல்கியில் கலைச்செல்வியின் பெரியாயி சிறுகதை வந்திருக்கிறது. கதை முழுக்க வலியிழைகிறது.