காக்கை சிறகினிலே செப்டம்பர் 2017 இதழில் வெளியான சிறுகதை
”கட்டிலெல்லாம் சொகுசுதான்.. என்னவோ பேர் சொன்னாளே.. இந்த மெத்தைக்கு.. கலாவோ என்னவோ… எங்க சுத்துனாலும் அவ பேர்லதான் நிக்குது.. ஒங்க தாத்தன் நல்ல நெறக்க கலையரசின்னு கூப்டுவாரு.. நா கலரசிம்பேன்..” வாய் நிற்காமல் பேசும் அம்சம் பாட்டிக்கு.
”கட்டிலெல்லாம் சொகுசுதான்.. என்னவோ பேர் சொன்னாளே.. இந்த மெத்தைக்கு.. கலாவோ என்னவோ… எங்க சுத்துனாலும் அவ பேர்லதான் நிக்குது.. ஒங்க தாத்தன் நல்ல நெறக்க கலையரசின்னு கூப்டுவாரு.. நா கலரசிம்பேன்..” வாய் நிற்காமல் பேசும் அம்சம் பாட்டிக்கு.
”பாட்டி
அது கலால்ல.. கர்லான் மெத்தை..” கலாவின் பேரப்பிள்ளை திருத்தி சொல்லிக் கொடுத்தாலும்
அம்சத்துக்கு அது கலாதான்.
”எதோ
ஒண்ணுடீ குட்டீ..” கண்களை இடுக்கி முகத்தின் வரிகளுக்கிடையே சிரிப்பாள் அம்சம்பாட்டி.
இளமை மீதமிருந்த நாற்பதுகளின் தொடக்கத்தில் பாட்டியான போது கொஞ்சம் நெருடலாகதான் இருந்தது
அம்சத்துக்கு. பிறகு ஆணில் இரண்டும் பெண்ணில் இரண்டுமான கலையரசியின் வாரிசுகள் அவளை
சூழ்ந்துக் கொள்ள மதிமயங்கிதான் போனாள்.