Search This Blog

Wednesday 19 December 2018

எழுத்தாளர் பாவண்ணன் - “மாயநதி“ குறித்து.

அன்புள்ள கலைச்செல்வி

வணக்கம். 


நேற்றும் முந்தாநாளுமாக இரு தினங்களில் ’மாயநதி’ தொகுதியை தொடர்ச்சியாக உட்கார்ந்து படித்துமுடித்தேன். மனிதர்களை மிக்நெருக்கத்திலிருந்து எடுத்த படங்களின் தொகுப்பைப் புரட்டிய உணர்வை அடைந்தேன். ஈரமில்லாமல் இரக்கமில்லாமல் கருணையில்லாமல் மாறி தன்னை நிறுவ முனையும் மனிதர்கள் ஒருபுறமாகவும் இயலாமையோடும் இல்லாமையோடும் வதைபட்டு வாழ்வின் விளிம்பில் மரணத்துக்கு அருகில் தவித்துப் புலம்பும் மனிதர்கள் மற்றொருபுறமாகவும் நிறைந்திருக்க, இரண்டுக்குமிடையே உங்கள் மாயநதி ஓடுவதாக ஒருகணம் தோன்றியது. பெரும்பாலான கதைகளில் வறுமைச்சித்திரங்கள் மிகமிக இயல்பாக இருக்கின்றன. நம்பகத்தன்மை மிக்க உரையாடல்கள் அத்தகு சித்திரங்களுக்கு வலிமையளிக்கின்றன.

Thursday 13 December 2018

'அற்றைத்திங்கள்' நாவல் குறித்து எழுத்தாளர் பா.கண்மணி

கலை,

அற்றைத்திங்கள் படித்துவிட்டேன்! தலைப்பே மயக்குகிறது. இப்படியொரு சமூக உணர்வுள்ள நிகழ்காலப் பிரச்சினையைப் பேசும் நாவல் தமிழில்-அதுவும் பெண் எழுத்தாளரால்! கர்வமாக இருக்கிறது .


எவ்வளவு தகவல்கள்-அறிந்துகொள்ள! பிரச்சார நெடியடிக்காதவண்ணம் காடு தன் வாசத்தைக் கதைநெடுகப் பரப்பியிருக்கிறது. காட்டை இதுவரை கண்டிராத நான்  காட்டிற்குப் போய்வந்ததாக  உணர்ந்தேன் .அதை நேசிக்கவும் ஆரம்பித்துவிட்டேன்.தைரியமான ,சுவாரசியமான,மனதை ஆற்றாமைக்கு உட்படுத்தும்  அரிய நாவல். தமிழகத்தில்(இந்தியா முழுதும்தான் ) இப்போது நடக்கும் கொடுமைகளை சமரசமின்றித்  தோலுரித்துக் காண்பிக்கிறது நாவல்-அதுவும் மிகையே இல்லாமல்.

'அற்றைத்திங்கள்' நாவல் குறித்து லோகமாதேவி

அன்பின் கலை
அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.,
நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம்அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று   


'மாயநதி' சிறுகதைத் தொகுப்பு குறித்து லோகமாதேவி

அன்பின் கலை நலமா!

 நேற்று இரவு இறங்கியது மாய நதியில், இப்பொழுதுதான் மனதும் உடலும் ஈரமாக குளிர்ந்து கரையேறி இருக்கிறேன் அருமையான கதைகள் அம்பையின் முன்னுரையை விட உங்களின்  தன்னுரை மிகவும் அருமையாக இருந்தது. இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து கதைகளிலும் ஒன்றே ஒன்றை மட்டும் நான் அகநாழிகையில் முன்பே வாசித்திருக்கிறேன்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரம்.அருமணிகள் நிறைந்த ஒரு அபூர்வ ஆபரணம் போலிருந்தது தொகுப்பு முழுவதும் கதைகள் அனைத்துமே,  விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியே பேசுகிறது கம்பராமாயணக்கதையையும் மாயதியில் மூழ்கி இருக்கும் ஒருவ்னயும்  தவிர.




மாயநதி தொகுப்பு குறித்து சிவமணியன் அவர்களின் விமர்சனக்கட்டுரை

ஐந்திணை’ நிகழ்வி்ற்காக வாசித்த சிறுகதை தொகுப்புகளில் கலைச்செல்வியின் ‘மாயநதி’ ,  அதன் உள்ளடக்கம்,  வேறு வேறு கதைச்சூழல்கள் , கதைக்கருக்கள் போன்ற தன்மைகளால் பிறிதொன்றில்லாத வாசிப்பனுபவம் தந்தது.
இந்த தொகுப்பின் கதைகளை,   வேளாண் நிலத்தின் மண்துகள் வாசனையை நாசியில் நிரப்பியபடி,  கால்களை அழுத்தமாக நீர் குழைத்த செம்பழுப்பு  ஈர மண்ணில் ஊன்றச் செய்த,   கதைகள்  ஒரு வகையாகவும்,  எண்ணவோட்ட சித்தரிப்பு மட்டும் முதன்மையாக அமைந்த  பிற வகைகளாகவும்  பிரிக்கலாம். இந்த வகைமைகளுக்கு வெளியே மருங்கையம்மன் போன்ற இருள்மிகுபுனைவும்(dystopian), வியாழக்கிழமை, பெரியாயி போன்ற யதார்த்தவாத  முயற்சிகள் எனவும் ஒரே அமர்வில் வாசிக்க முடிந்த சிறுகதைத் தொகுப்பு இந்த ‘மாயநதி’. 



Tuesday 4 December 2018

முடிவிலி (சிறுகதை)




வலிமையான சிறைக்கம்பிகளுக்கு பின் அவன் பகுதிபகுதியாக நின்றிருந்தான். பின்புறம் நீண்டிருந்த வாராண்டாவில் ஒளியின்மை அழுக்கு போல சூழ்ந்திருந்தது. உடலை ஒருக்களித்து வலதுக்கையின் விரல்களால் மிக லேசாக கம்பியை பற்றிக் கொண்டிருந்தான். அவன் கூரான மூக்கும் சிறிய கண்களும் முகம் முழுக்க தாடியுமாக இருந்தான். தாடை முன்புறம் சற்றே நின்றிருந்தது. அவனுடைய முப்பத்தேழு வயதை மீறி மயிர் நரைத்திருந்தது.

Tuesday 20 November 2018

கங்கை (சிறுகதை)

இருள் விலகியிருக்காத அதிகாலைப்பொழுது அது. கங்கை ததும்பலாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும்கீழுமான நீரின் எழும்பல்கள் இளங்காலைக்கான ஒளியை ஏந்தியபடி தனக்கென பிரத்யேக சத்தங்கள் ஏதுமற்றதுபோல ஓவியமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. இமயத்திலிருந்து உருட்டிக் கொண்டு வரப்பட்டு சிதறலாக கிடந்த பாறைக்கற்களை நுரைகளாக கடந்தோடியது கங்கை. எங்கோ விடப்பட்ட தீபங்களும் மாலைகளும் நதியை புனிதமாக்கியபடி மிதந்தன.

Thursday 15 November 2018

முத்துபொம்மு (சிறுகதை)

பதாகை நவம்பர் 2018 இதழில் வெளியானது.



கருவேலங்காட்டுக்குள் புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி புழக்கமனைத்தும் வெளியே சிதறியிருக்க, சாக்கடையாக தேங்கிக் கிடந்த புழங்குநீரை ஈக்கள் கொண்டாடிக் களித்தன. பத்தேறிய கரிப்படிந்த பாத்திரங்களை புழங்காத நேரத்தில் உருட்டி விளையாட நாய்களுக்கு அச்சமிருப்பதில்லை. குடங்களில் பத்திரப்படுத்தியிருந்த பிளாஸ்டிக் நீர் சூடேறிக் கிடந்தது. சோற்றுக்கஞ்சியின் தடம் பதிந்த தரைகள், பாயோடு படுக்கையோடு கிடக்கும் வயதானவர்கள் என யாரையும் எதையும் மிச்சம் வைக்காமல் மதிய வெயில் குடியிருப்பை எரிச்சலாய் சூழ்ந்திருந்தது. வெயிலை உறிஞ்சிக் கொண்டு காற்றிலசைந்த கறிவேலஞ்செடிகள் மெலிதாய் மலவாடையை பரப்பியது.

Friday 9 November 2018

கற்பின் நீட்சி (கட்டுரை)

“குறி“ அக்டோபர் - டிசம்பர் 2018 இதழில் வெளியானது.


சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. தொலைக்காட்சி நடிகை ஒருவரின் காதலரான(?) ஒருவர் எரிவாயு ஊற்றி தன்னை எரித்துக் கொண்டு மாய்ந்து போனார். திரைப்பட உதவி இயக்குநர் என்று அறியப்படும் அவருக்கு சமூகம் கொடுத்த முகவரி “நடிகையின் காதலன்“ என்று.

Wednesday 31 October 2018

மாயநதி




மாயநதி சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் ஆகஸ்ட் 2018

Saturday 15 September 2018

வார்ப்புகள் (சிறுகதை)

மணல்வீடு செப்டம்பர் 2018 இதழில் வெளியானது.


பலகைபோல அகலமும் வார்த்தெடுத்தது போன்ற பொலிவுமாக வரைவதற்கு தோதாக இருந்தது அந்த கருங்கல். வரைவது அவளுக்கு பிடித்தமானது. சிமிண்ட்கல்லை கூராக்கி கருங்கற்களில் அவள் வரைந்த ஓவியங்கள் ஓடைக்கரையெங்கும் நிரம்பிக் கிடந்தன. அவற்றில் பெரும்பான்மை மலை.. கிராமம்.. அவளின் வீடு.. அம்மா.. அம்மாவைப் பெற்ற பாட்டி.. இரண்டு தம்பிகள் என்றிருக்கும். வரைவது எதுவாயினும் அவற்றின் முகப்போ, முகமோ புசூருவை ஒத்திருக்கும்.

பட்டுவாடா (சிறுகதை)


பதாகை ஆகஸ்ட் 2018ல்  வெளியான சிறுகதை


அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும் சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.

Saturday 30 June 2018

கனவு (சிறுகதை)

ஜுலை 2018 காலச்சுவடில் வெளியானது


அன்று எங்களிடம் குறைவில்லாத பணம் இருந்தது. எங்களிடம் என்றால்.. எங்கள் தாத்தாவிடம்.. அப்பாவிடம்.. பிறகு என்னிடமும். எல்லோருக்கும் வீடு வாசலெல்லாம் ஒரே இடம்தான்.. பரம்பரையாக வந்த வசதி அல்ல.. தாத்தா கையை ஊன்றி கர்ணம் அடித்திருந்தார். அப்பாவுக்கு சம்பாத்தியத்தில் அத்தனை சிலாக்கியம் இல்லை.

Sunday 17 June 2018

கூடு


பதாகை 17.6.2018 இதழில் வெளியானது

எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிடக்கும் மலையடுக்குகளை சூரியன் அணுகி நெடுநேரம் கழிந்த பிறகும் நாளிக்குள் மூழ்கிக் கிடக்கும் விருப்பத்தையொத்தது. அதனாலேயே பகல் கனியத் தொடங்குவது அவனுக்கு வாதையாக இருந்தது. பிறகு அதை விட பெரும்வாதைகள் அங்கு நிகழத் தொடங்கின. மரங்களை வெட்டியதாகவும், பறவைகளை சுட்டதாகவும், பன்றிகளை உண்டதாகவும் அவர்கள் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டாலும் குறிகள் எங்கள் நிலத்திற்கானவை என்பதை உணரவியலாத வயது அவனுக்கு.  மேற்கு வானில் மறைய எத்தனிக்கும் சூரியனின் செந்நிற ஒளிக்கீற்றுகளை போல நாங்கள் இரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தோம். அவனோ காடெங்கும் திரிந்தலைந்தலையும் வேட்கை கொண்டவனாக வளரத் தொடங்கினான். உயர்ந்த நெடிய தோற்றம் கொண்டவன் அவன். கரிய நிறமும் சற்றே வரிசை தவறிய பற்களுமாய் இருப்பான். கொழுத்து விளைந்த வயக்காட்டை இரவு நேரங்களில் அவனிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம். சிறுத்தையின் காலடித்தடத்தில் தன் படர்ந்த பாதச்சுவடை ஒற்றி எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.



அன்று ஆபிசர்கள் கடமான் தேவைப்படுவதாக சொல்லியனுப்பியிருந்தனர். சமவெளிக்கும் எங்களுக்குமான இணைப்பை இவர்களிடமிருந்து நாங்கள் தொடங்கிக் கொண்டதெல்லாம் ஒரு காலம். எப்படியாவது இவர்கள் இணக்கமாகி விடமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் காலமிது. அசைவை நோக்கி குத்தீட்டியை எறிவது ஒன்றும் கடினமல்ல. கடமான் தட்டுதடுமாறி சொப்பங்குழிக்குள் விழுந்திருந்தது. கிடைத்த கிளைகளிலும் பிடிமானங்களிலும் கால் வைத்து புதர் அப்பிக் கிடந்த பள்ளித்தினுள் இறங்கினான். நின்று நிதானித்து  விருந்து பரிமாறுமளவுக்கு கொழுத்த மான் அது. இவனை கண்டதும் துள்ளியெழ முயன்று, இயலாமையில் மடங்கியது. அதன் தொடையில் குத்தி நின்ற குத்தீட்டியின் வழியே குருதி பெருகிக் கொண்டிருந்தது, அப்போதுதான் அதன் வயிற்றை கவனித்திருக்க வேண்டும். நல்லவேளையாக உள்ளிருக்கும் குட்டிக்கு அடி விழுந்திருக்காது என்ற ஆறுதல்பட்டுக் கொண்டான். குத்தீட்டியின் காயம் வலி ஏற்படுத்தாதவாறு நோகாமல் ஊனான்கொடியால் அதன் கால்களை கட்டி சாக்கில் சாய்த்து வைத்து சாக்கை கயிற்றில் இணைத்தான். கூட்டாளிகள் புன்னைமர கமலையில் கயிறு கட்டி இழுக்க, கடமான் மேலே வந்து சேர்ந்தது.

Friday 15 June 2018

மீட்சி


”இந்த இடத்தில நம்பளமாதிரி மனுசங்க ஒரு காலத்தில வாழ்ந்தாங்கன்னா நம்ப முடியில ஹெஃபி...” என்றேன்.. வானுார்தியின் வேகத்தை பொத்தான் வழியே குறைத்தப்படியே.
என்னை பற்றி சொல்வதென்றால் மினுாட் என்பது என் பெயர். அநீதிகளின் உச்சத்தை எட்டிய பின் வேறு வழியின்றி அற உணர்விற்குள் ஆற்றுப்படுத்திக் கொண்ட நவீன உலகத்தின் பிரஜை நான். மற்றபடி உலகம் சுற்றுவதில் ஹெஃபிஸை விட ஆர்வமானவள். தேடல்களுக்குள் வாழ்க்கையை நுழைத்துக் கொண்டு அதன் அர்த்தங்களில் ஜீவிக்கிறவர்கள் என்று எங்களை பற்றி மற்றவர்கள் கணிக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம்.
”அதுக்குதான் இத்தன கட்டுமானங்களும் சாட்சியா நிக்குதே.. நம்பித்தானே ஆகணும்..” என்றான் ஹெஃபிஸ். என் நண்பன். இருவரும் இருபதுகளின் இறுதியிருக்கிறோம். அதற்குள்ளாகவே நிறைய நாடுகளை பார்த்து விட்டோம். உலகம் சுற்றுவதற்காகவே உயிர் வாழ்வது போல ஞாயிறுகளை கூட உழைப்பாக்கி பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வோம். சுற்றுப்பயணத்துக்கான இடத்தை வெகு முன்பாகவே தீர்மானித்து விடுவோம். அது சம்பந்தமாக திரட்டும் தகவல்களும் எண்ண அலைகளும் பயணத்தை வெகுவாக சுவாரஸ்யப்படுத்தும். இந்தியாவுக்கான பயணத்திட்டம் வகுத்தும் நான்காண்டுகளாக ஏனோ தள்ளிக் கொண்டே போகிறது.

Monday 11 June 2018

மாயநதி


பதாகை இணைய இதழ் 10.05.2018ல் வெளியானது



செங்குந்தான பசுங்கோபுரங்களாய்ப் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெரிதும் சிறிதுமான கூழாங்கற்கள் நிறைந்துக் கிடந்தன. காற்று நீரைத் தொட்டுக்கொண்ட சிலிர்ப்பில் கிறங்கித் தவழ்ந்தது. கரையோரமாக ஒதுங்கிக் கிடந்த கூழாங்கல் பாறையொன்றில் அமர்ந்து கால்களை நீரில் நனைத்திருந்தோம்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருப்பியா...” உள்ளத்தில் வழிந்துக் கிடந்த அன்பை முடிந்தவரை கேள்வியில் இழைய விட்டேன். குரல் அதுவாகவே நெகிழ்ந்து குழைந்தது.

அது

சொல்வனம் பிப்ரவரி 2018ல் வெளியானது

அவன் கழுத்து வெட்டப்படுவதற்கு முன் கழுத்தோடு கையை வளைத்து அவனை அணைத்துக் கொண்டிருக்கிறேன்.  தலையை சாய்த்து சிரிக்கும் அவனின் பற்கள் அத்தனையும் முத்துகள். வரிசையான முத்துகள். இரத்தம் கசிந்த முத்துகள். அவை விகாரமாகி இளித்து அலைபேசியின் திரையிலிருந்து முன்னெழும்பி முகத்தருகே.. முகத்தருகே.. படர்ந்து.. பின் மெல்ல அடங்கி. அடங்கிய நேரத்தில் திரை இருளாகி இரத்த வண்ணமாக நிறைந்தது. மரணத்தின் நிறம் சிவப்பு.. பூமியெங்கும்.. மரணத்தின் காலடியோசைகள்.. ஆனால் இது இயற்கையானதல்ல.. வரவழைக்கப்பட்டது.. கொடூர மரணம். கொலை.. டயரில் நிரம்பிய காற்றை வெளியேற்றுவது போல கழுத்தை அறுத்து உயிரை வெளியேற்றிய மரணம்.. எதையும் மாற்ற முடியாது. சாதியை.. அது கிளர்ந்தெழுப்பும் ஆணவத்தை.. எதையுமே மாற்ற முடியாது..எல்லாமே நிபந்தனைக்குட்பட்டவை. நிர்பந்தங்களாலும் நிபந்தனைகள் உருவாகலாம். ஆனால் எதையும் மறு ஆக்கம் செய்ய முடியாது. மாற்ற முடியாது. மாற்றினால் மாற்றி விடுவார்கள். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.


“சனியன் புடிச்ச செல்போன் எழவு.. அந்த எழவயே கைல புடிச்சுக்கிட்டு என்ன எழவுடீ பண்றே..” புடவை சரசரத்து கத்தியது. தேவகி என்று அதற்கு பெயர். ஒரு இழவே தாங்க முடியாதபோது எத்தனை இழவுகள். எத்தனை இரவுகள் கழிந்தாலும் அவனது இழவு களையை இழக்காமல் இன்னும் புதிது போல.. சொல்லப் போனால் இன்னும்.. இன்னும் முளைத்துக் கொண்டே.. கழிக்க கழிக்க கிளைத்து.. கிளைத்து.. கொடியைப் போல படர்ந்து படர்ந்து உடலை இறுக்கி.. ஆனால் எல்லாக் கட்டுகளை தளர்த்த வல்லது அது.

பெல்ஜியம் கண்ணாடி

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

என்னிடம் பிரதிபலிக்காத கண்ணாடி ஒன்றுள்ளது. ரசமெல்லாம் போகவில்லை. ஒருவேளை பிரதிபலிப்பதற்கு ஏதுமில்லாமல் இருக்கலாம். இதற்கு முன் உடைபட்டிருந்தது என்பதை சட்டென கணிக்க இயலாதளவுக்கு பளிச்சென்று இருந்தது. உடைசல் பெருந்துண்டுகளாக இருப்பது ஒருவகையில் வசதிதான். சிறு வீறல்களெனில் பார்வைக்கு தென்பட்டு விடும். குடிசை யாருடையதோ என்றாலும் அப்படியும் இப்படியுமாக ஓரளவுக்கு அதை பொருத்தி வைத்திருந்தேன். யாரோ இதை பெல்ஜியம் கண்ணாடி என்றார்கள். பிறப்பிடமும் வாழிடமும் முற்றிலும் வேறானவை என்பதாக இதைப் புரிந்துக் கொண்டேன். அதற்கே இருபத்துநான்கு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.



“உங்க பேரு..?”

பெல்ஜியத்தில் வைத்தப் பெயரா..?

Thursday 7 June 2018

மருக்கையம்மன்


“குறி“ மே-ஜுன் 2018 சிற்றிதழில் வெளியான சிறுகதை



இடைப்பட்ட ஐந்து வருடம் என்பது நீண்ட நெடுங்காலமல்ல என்னைப் பொறுத்தவரை. ஆனால் இம்முறை எனக்கு ஆர்வமிருந்தது. ஒருவேளை பணத்தால் ஆகும் பயனெல்லாம் ஓரளவு அனுபவித்த பிறகு ஏற்படும் சலிப்பான மனநிலைக்கு இதை ஒரு மாற்றாகக் கருதியிருக்கலாம். அதோடு கோவிந்தின் புலம்பல் வேறு. என்ன சொன்னாலும் அவர்களின் தலை ஆமோதிப்பாகவே அசைகிறதாம்.

இதைக் கேட்பதற்கு உங்களுக்குப் புதுமையாக இருக்கலாம். நானும் அப்படித்தான் முதலில் உணர்ந்தேன். இப்படி ஒரு கிராமத்தை நான் பார்த்ததேயில்லை என்றேன். இத்தனைக்கும் பள்ளி நாட்களில் எனக்கு நன்கு அறிமுகமான கிராமம்தான் அது. கோவிந்த் என் இளமைக்கால வகுப்புத் தோழன். என் அப்பாவின் பணி, பிறகு என் அயல்நாட்டு பணி இவையெல்லாம் என்னை அவனிடமிருந்து முற்றிலும் பிரித்து விட, ஐந்து வருடங்களுக்கு முன் ஒருவழியாக நாங்கள் ஒருவரையொருவர் மீட்டுக்கொண்டோம். மீட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியப் பயணங்கள் சம்பிரதாயமாக மாறிக்கொண்டிருந்த நேரமது. சிறுவயதுத் தோழமை பயமறியாத ஆர்வத்துடனும், கொச்சையான கோபதாபத்துடனும் ஆர்ப்பாட்டமான எதிர்பார்ப்பு அல்லது எதிர்பார்ப்பற்று கட்டமைக்கப்படுவதால் யாதார்த்தம் தொலையும் வயதுகளில் பால்ய தோழமை மீதிருக்கும் பிரேமை கூடி விடுகிறது.  அதுவே பயணத்திற்கு ஒருவித ஈர்ப்பை கொடுத்தது. இரண்டு முழு நாட்களை அவனுடன் ஒதுக்கிக் கொண்டேன். அவனும் ஏமாற்றவில்லை. இரு பிள்ளைகளுக்குத் தகப்பனாக, கிராமப் பஞ்சாயத்தின் தலைவனாக, தாட்டியமான ஆகிருதியுடன் வாய் நிறையப் பல்லாக என்னை கட்டிக் கொண்டான். அவனின் மனைவியும் வாய் நிறைய வரவேற்றார். கணவனைப் போலவே அவரும் நீள அகலங்கள் நிறைந்தவராக இருந்தார். குனிந்தால் நிமிரவெல்லாம் முடியாது. இருவருக்கும் நிறைய அன்னியோன்யம் இருந்தது. மனைவியைக் கேட்காமல் அவன் தும்மக் கூட விரும்ப மாட்டான் என்று தோன்றியது.

Thursday 10 May 2018

ராசாத்தியும் கலாராணியும்


சிறப்பு சிறுகதை - பேசும்புதியசக்தி மே 2018

திருவிழாவைப்போலக் கிணற்றைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் மூன்று குடத்துக்கு மேல் எடுக்க முடியாது. தொங்கிக்கொண்டிருக்கும் சகடைகளில் கையோடு கொண்டுசெல்லும் கயிற்றை நுழைத்து குடத்தோடு இறுக்கிக் கட்டி நீரை இறைத்துக்கொள்ள வேண்டும். நீரின் மட்டம் இறங்கிக்கொண்டே போனதில் தாம்புக்கயிறு அறுத்து மரகதத்துக்கு உள்ளங்கைத் தோல் உரிந்துகிடந்தது.

”நா ஒண்ணுக்கும் ஒபயோகமத்து போயிட்டன்ல்ல மரவதம்....” தன்னிரக்கம் கவிந்தது கந்தசாமியின் பேச்சில். கிராமமே நீரைத் தேடிக் குடும்பமாக அலையும்போது ஒற்றையாளாய் மனைவி தடுமாறிப்போவது அவருக்கு வருத்தமாக இருந்தது.   எழுந்து நடமாட முடியாத உபாதை அவருக்கு. இப்போது நினைவும் மாறிக்கொண்டே போகிறது காலக்கணக்கு தெரியாமல். நேற்றுதான் திருமணம் முடிந்ததுபோல இடைப்பட்ட நாற்பது வருடத்தை திடீரென மறந்து விடுவார்... கொல்லைல அடிப்பைப்பு சத்தம் கேக்குது... யாருன்னு பாரு என்பார். எது புரிகிறதோ இல்லையோ மனைவிக்கு உதவ முடியாமல் முடங்கிப்போனது புரிந்திருந்தது.  சென்ற வாரம் சலீம்பாய் வந்தது இப்போது நினைவிலிருக்கலாம்... அல்லது இல்லாது போகலாம். ஆனால் சலீம்பாயை அடையாளம் தெரிந்திருந்தது. கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தபடியே அவரை நோக்கிக் கழியைச் சுழற்றியடித்திருந்தார்.


”அதெல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா தொணப்பாத... நீ ஒளைக்காம பொளைக்காமதான் நா ஆளாயிட்டனாக்கும்...” கணவனிடம் பேச நேரமின்றி இடுப்பில் ஒன்றும் கைகளில் மூன்றுமாகக் குடங்களை அள்ளிக்கொண்டு நடந்தாள் மரகதம். அறுபது வயதிற்கான தேகம் பாதையற்ற பாதையில் தடுமாறியது. வெயில் வேறு மிரட்டியது. ராசாத்தியும் கலாராணியும் இருந்திருந்தால் இந்நேரம் பின்னோடு வந்திருக்கலாம். மொச்சுமொச்சென்று வாயில் எதையாவது அசைபோட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் இரண்டுக்கும். அடர்ந்த கருத்த உடல் அவைகளுக்கு. ராசாத்தியின் வாலோரம் சிறு வெள்ளை ஒட்டியிருக்கும். கலாராணிக்கு காது மடலுக்குப் பின் பொட்டுப் போன்ற வெள்ளைப் புள்ளியிருக்கும். மற்றபடி வித்யாசமில்லை.

Wednesday 25 April 2018

அவை ஊளையிடுகின்றன

ஏப்ரல் 2018 தடம் இதழில் வெளியான சிறுகதை


சுவரின் மறுபக்கம் அவை உறும தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால் அந்த ஒலியே அவளை மருள வைத்தது. கைகள் இரண்டையும் மடித்து உடலை குறுக்கி சுவரோரமாக பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்று விடலாம். ஆனால் அது வெகு சில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறி விடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பது போலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டி பார்க்கும்போது யாதும் தட்டுப்படுவதில்லை. ஆனால் அது கூட வெகு சில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படிதானோ.. சுவற்றோடு காதை நெருக்கி வைத்துக் கொண்டாள். இல்லை.. அவை நடமாடுகின்றன. அவளை கண்காணிப்பதற்கு தோதான இடத்தை தேடி அங்குமிங்கும் அலைகின்றன.  விறுக்கென்று அடி வயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

அவளை கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படிதான் உருவப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து தான் கண்காணிப்பில் இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். உறுமல்கள் சன்னமாக கூடின. பிறகு குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு அடக்க முடியாததாகி விடும். நாலைந்து.. இல்லையில்லை.. ஏழெட்டு இருக்கலாம்.. அடர் கருப்பில்.. அல்லது திட்டுதிட்டான கருப்பில்.. வெளிர் செம்மண் நிறத்தில்.. நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும்.. தாட்டியமாகவும்.. இடைவிடாது குலைக்கும் சுபாவத்துடனும் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுதானிருந்தது. ஆனாலும் உளுத்துப் போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்கு பாதுகாப்பு.. வீடு அவளுக்கு பாதுகாப்பு.. வீடு என்றாலே பாதுகாப்புதானே.. அதுவும் நிறைந்த வீடென்றால்.. கணவன்.. மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்ட தொடங்கியபோது அகல கால் வைக்கிறோமோ..? அவளுக்கு பயம் வந்தது. கணவன் சொன்னான்.. “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்கு பயம் வந்தது.. ”மூணு பயலுவன்னு ஆயிடுச்சு.. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூம்பா தடுத்ததுட்டா நல்லாருக்கும்..” அவள் சொன்னாள். “நல்லாதான் இருக்கும்..” ஆமோதித்தான். இரட்டை கட்டு வீடோ.. முற்றம் வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும் முன்கூடம்.. சமையலுக்கு ஒன்று.. பத்தாயம் வைக்க ஒன்று.. படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளை புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும்.. விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாட்கள் கடந்தபோது அந்த தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை.. அல்லது யாரும் உணரவில்லை. 



ஆழமான பரவல்


மார்ச் 2018 தளம் இதழில் வெளியான சிறுகதை

சாதத்தை தட்டில் கொட்டிக் கொண்டான் கதிர். சாம்பாரில் கிடந்த முருங்கைக்காயை கடமைக்கு உறிஞ்சி விட்டு சோற்றை அள்ளி திணித்தான். ஞாபகம் வந்தவன் போல அவ்வப்போது கேரட் பொறியலையும், வெண்டைக்காய் வதக்கலையும் தொட்டுக் கொண்டான். வாழைக்காய் வறுவலை சட்டை செய்யாமல் இடதுக்கையால் குழம்பை சோற்றில் ஊற்றிக் கொண்டே குப்புறக்கிடந்த கத்திரிக்காயோடு சோற்றை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான்.



கதிர் அப்போது சிறுவனாக இருந்தான். கிட்டத்தட்ட குண்டானில் இருந்த முழுச்சாப்பாட்டையும் முடித்த போதும் வயிறு வலித்தது அவனுக்கு.. ஆனால் பரவலாக வலிக்கவில்லை. வயிற்றின் ஆழத்தில் வலி. அதுதான் தொடக்கம். அதை அப்படியே விட்டுவிட்டால் பரவலாகி விடும். நழுவும் டவுசரால் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டாலும் வலி நிற்காது. வலி வரும்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று புரிய முடிந்தாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் போதவில்லை. தங்கை எதற்கோ அடம் பிடித்து அழ, அவள் தட்டிலிருந்த சோற்றை சாப்பிடும் எண்ணத்தோடு அருகே சென்று.. பிறகு அம்மாவின் எரிச்சல் பார்வைக்கு பயந்து விலகி ஓடினான். எங்கு ஓடினாலும் வயிறும் கூடவே வந்து விடுகிறது. பள்ளியில் இருக்கும் போது.. விளையாடும்போது.. ஏன் துாங்கும்போது கூட வயிறு அவனை விலக்குவதில்லை.

சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது

பதாகை ஜனவரி 2018ல் வெளியானது

வனப்பாதை சுழன்று சுழன்று வாகனத்தை மேலேற்றியது. வாகனம் என்றால் முன்புறம் மகிழுந்து போலவும் பின்புறம் சிறு விலங்குகளுக்கான விசாலக்கூண்டுமாய் வடிவமைக்கப்பட்ட சொகுசு வேன். இருபுறமும் வனம் சரிவான அடுக்குகளாய் இறங்கியிருந்தது. கவிகையால் மூடப்பட்ட வனத்தின் மேற்பகுதி அடர்பச்சையாய் காட்சியளித்தது. இங்கேயே இருந்திருந்தால் சித்ராவின் விதி நிர்ணயிக்கப்பட்டிருக்காதோ.. நழுவிய மனதை நிலைப்படுத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவதில் கவனத்தைக் குவித்தேன். பொதுவாக நான் ஓட்டுநர் இன்றி தனியே கிளம்புவதில்லை. ஆனால் என் விருப்பத்தின்படியா எதுவும் நடக்கிறது..? குளிரூட்டியை அணைத்து விட்டு பக்கவாட்டு சன்னலை மையமாக கீழிறக்கினேன். குபுகுபுவென்று உள்ளே நுழைந்த காடு சிலிர்ப்பாக என்னை அணைத்துக் கொண்டது. சமீபத்தில் மழை பெய்திருக்க வேண்டும். ஆங்காங்கே நீர் தட்டுப்பட்டது. பசுநிலங்கள் இன்னும்.. இன்னும்.. என முளைப்புக்கு காத்துக் கொண்டிருந்தன.



வனம் என்னை இத்தனை மயக்கிப் போடும் என சமீபமாகதான் உணர்கிறேன். அதற்கு என் பணிச்சூழல் காரணமாக இருக்கலாம். தனியார் உயிரியல் பூங்காவில் புலிகளுக்கான சிறப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். அங்கு வைத்துதான் சித்ரா அறிமுகம். மீண்டும் சித்ராவுக்குள் புகுந்துக் கொள்வது வண்டியோட்ட உகந்ததல்ல. பார்வைக்குள் மனதை செலுத்தினேன். சூழ்ந்திருந்த பசுமை அகமெங்கும் ஒட்டிக் கொள்ள, காணுமிடமெங்கும் அன்பாக ததும்பி  மலையிலிருந்து அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. வெறும் மாயையான எண்ணமிது என்பதை மனம் நிர்தாட்சண்யமாக மறுத்து அன்பை வரைந்துக் கொண்டே செல்ல வாகனம் முன்னேறி நகர்ந்தது.


தொழில்நுட்பத்தின் துணையோடு, சிக்கலின்றி விடுதியை அடையாளம் கண்டேன். உள்ளே நுழைந்தபோதுதான் அது விடுதி போன்ற தோற்றத்திலிருக்கும் வனமாளிகை என புரிந்தது. எல்லாம் கம்பெனி ஏற்பாடு. வரவேற்பில் என் விசிட்டிங் கார்டை நீட்ட உட்புறமிருந்த குடிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.  காட்டேஜ் என்பதை குடில் என்று தமிழ்ப்படுத்தியாக வேண்டும் என்பதால் சொன்னேனே தவிர நவீன வசதிகளைக் கொண்ட அதி நவீன அடுக்ககம் போலிருந்தது அந்தக் குடில். சித்ரா.. பன்னீர்.. காந்தி.. வேதா.. எல்லாருக்குமே தனித்தனிக் குடில்கள்தான். ஆனால்  சித்ரா அதை சிறிதும் விரும்புவதில்லை. மூர்க்கமான பிடிவாதம்..  உயிரை காவுக் கொடுக்கும் பிடிவாதம்.

பயணக்களைப்பு இருந்தாலும் குளியல் தேவைப்படவில்லை. அரைமணி நேர ஓய்வு போதுமானதாக இருந்தது. அறையை பூட்டி சாவியை வரவேற்பில் கொடுத்தேன். புருவத்தை உயர்த்திய அவர்களிடம் “நாளைக்குதான் செக் அவுட்.. கொஞ்சம் வெளில நடமாடீட்டு வர்றேன்..” என்றேன். வாகன நிறுத்தத்தில் பொருந்தினாற்போல நின்றிருந்த வேனை திறந்து உள்ளே அமர்ந்துக் கொண்டேன். தரைப்பரப்பெங்கும் செயற்கையான புல்வெளி. நடக்கத் துாண்டியது. வெளிக்காற்று உடலை நடுங்க வைத்தது. புற்கள் கால்களில் மசிந்தன. வனமாளிகையை சுற்றிலும் தடித்த சில்வர் குழாய்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர் பாதுகாப்பு கருதி குறுக்கு கம்பிகளால் நிறைந்திருந்தது. அதையடுத்து கோட்டையின் மதிலைப் போல அகலமான சுற்றுச்சுவர்.