Search This Blog

Tuesday 3 October 2017

“புனிதம்“ நாவலுக்கான “என்னுரையிலிருந்து..“

இலக்கியம், சமுதாயத்திலிருந்து தன்னை வேறாக நிறுத்தி அறங்களை அலசுகிறது. ஆழ்மன அடுக்குகளை துழாவியெடுத்து கூறுகளாக்கி அடையாளப்படுத்துகிறது அல்லது நம்மை நம்மிடமே அறிமுகப்படுத்துகிறது. சிறுகதை.. கவிதை.. நாவல்.. என எவ்வடிவிலோ சமுதாயத்தின் போக்கினை சுவாரஸ்யமான ஆவணமாக்குகின்றது. வலியோ.. வாழ்வோ நிதர்சனத்தை பேசும் போது அது அறமுமாகிறது.

“இரவு“ சிறுகதைத் தொகுப்பிற்கு “என்னுரை“


சிறுகதைகள் எதாவது ஒரு புள்ளியில் மையம் கொண்டு விரிகின்றன. விரிதலின் கோணம் அருகி ஒரு அரிய தருணத்தில் சட்டென்று அப்புள்ளியிலிருந்து விலகி விடுகின்றன. பிறகு அதனை ஏந்திக் கொள்வது வாசக மனம்தான்.

மனிதர்களுள் உலாவும் கதைகள் தான் எத்தனை விதமானவை..? புரியவியலாத போக்குடைய மனம் என்ற எண்ணங்களின் தோன்றலை யாராலுமே கணிக்க முடிவதில்லை. அதன் வடிவும், போக்கும் எந்த நீட்சிக்குள் அடக்கவியலாதது. அகத்தின் ஆழமானது பல விசித்திரமான நிலைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.