இந்நுால் பொது புரிதல்களின் வழியாக அல்லது சாதாரண வாசிப்பில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க
வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்த ஒரு மேலோட்டமான
சித்திரத்தை நமக்களிக்கும். அதே சமயம் “தென்னாப்பிரிக்க
சத்தியாகிரகம்“ என்ற காந்தியடிகள் எழுதிய நுாலை வாசித்த பிறகோ அல்லது அவரை
ஓரளவுக்கு அணுகியபிறகோ இத்தொகுப்பை வாசித்தால் காந்தி மகாத்மாவாகும் தருணங்களை அணுகி
நுகர முடியும்.
அவர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்திய விதம், ஐரோப்பியர்கள் மீது அவர் கொண்டுள்ள பார்வை, சத்தியாகிரக போராட்டம் பிறந்த விதம், சாத்விக போராட்டத்தின் தத்துவமும் அனுபவமும், கொள்கையில் உறுதிக் கொள்வது, மகனுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள், ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து விட்டு அந்த அவசரநிலையிலும் அதனை பதிந்து வைத்த விதம், சத்தியாகிரக போராட்டத்தில் தமிழரின் பங்கு, அவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாக்களின்போது அவரது உரை என பரவலான பார்வையை அளிக்கும் நோக்கோடு இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம்.
1896 அக்டோபர் 14 அன்று முதன்முதலாக காந்தி முதன்முறையாக மதராஸ் வருகிறார். அக்டோபர் 26 பச்சையப்பாஸ் ஹாலில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மதராஸ் மகாணத்தின் தலைநகராகவும் அந்த பிராந்தியத்தின் வணிக, அரசியல் மையமாகவும் விளங்கிய மதராஸ்தான் நேட்டால் பிணைத்தொழிலாளர்கள் பலருக்கும் சொந்த ஊர் என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை.
தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒரு லட்சம் பிரிட்டிஷ் இந்தியர்கள் சார்பாக நான் உங்களிடம் முறையிட்டுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்..
1)