Search This Blog

Wednesday 23 June 2021

மகாத்மா காந்தியின் பதினேழு தொகுப்பு நுால்களில் முதலாவதான தென்னப்பிரிக்க சத்தியாகிரகம் நுாலில் பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ள “தென்னாப்பிரிக்கா பற்றி காந்தியின் பேச்சுகள், கட்டுரைகள்“ என்ற சிறுத்தலைப்பிலான உபத்தொகுப்பு குறித்த நுால் அறிமுகம்.

 


இந்நுால் பொது புரிதல்களின் வழியாக அல்லது சாதாரண வாசிப்பில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்த ஒரு மேலோட்டமான சித்திரத்தை நமக்களிக்கும். அதே சமயம்தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்“ என்ற காந்தியடிகள் எழுதிய நுாலை வாசித்த பிறகோ அல்லது அவரை ஓரளவுக்கு அணுகியபிறகோ இத்தொகுப்பை வாசித்தால் காந்தி மகாத்மாவாகும் தருணங்களை அணுகி நுகர முடியும். அந்த வகையில் இந்த தொகுப்பு மிக முக்கியமானது.

காந்தியடிகளின் எழுத்துகள், உரைகள் அனைத்தையும் திரு.தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட காந்தி நுால் வெளியீட்டுக் கழகம் 1957ல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நுால்களின் சிறப்பு இதன் மொழிப்பெயர்ப்பும் அடிக்குறிப்பும் என சொல்லலாம். மொழிப்பெயர்ப்பு செய்து கிட்டத்தட்ட 64 வருடங்களை கடந்த பிறகும் வாசிப்பதற்கு தடைகள் ஏற்படுத்தாத நவீன புனைவுமொழி புழங்குவதில் சிரமமேற்படுத்துவதில்லை. இந்நுாலை திரு.இரா.வேங்கடராஜுலு அவர்கள் மொழிப்பெயர்த்துள்ளார். இரண்டாவதாக சம்பங்கள், பெயர்கள், இடங்கள், அது தொடர்பான நிகழ்வுகள் என எதுவாக இருப்பினும் அடிக்குறிப்பில் அவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட மொழிப்பெயர்ப்புக்கிணையான உழைப்பு கோருபவை. காந்தியக் கொள்கைகளின் மீதான பிடிப்பம் ஆர்வமுமின்றி இத்தனை பெரிய பணியை செய்து விட முடியாது. ஆனால் இத்தகைய அளப்பறிய கூட்டு உழைப்பை ஒரு தனி மனிதர் கோருகிறார் எனில், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பரிமாணத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

அவர் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்திய விதம், ஐரோப்பியர்கள் மீது அவர் கொண்டுள்ள பார்வை, சத்தியாகிரக போராட்டம் பிறந்த விதம், சாத்விக போராட்டத்தின் த்துவமும் அனுபவமும், கொள்கையில் உறுதிக் கொள்வது, மகனுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள், ஜெனரல் ஸ்மட்ஸை சந்திந்து விட்டு அந்த அவசரநிலையிலும் அதனை பதிந்து வைத்த விதம், சத்தியாகிரக போராட்டத்தில் தமிழரின் பங்கு, அவருக்கு நடந்த பிரிவு உபச்சார விழாக்களின்போது அவரது உரை என பரவலான பார்வையை அளிக்கும் நோக்கோடு இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். 

1896 அக்டோபர் 14 அன்று முதன்முதலாக காந்தி முதன்முறையாக மதராஸ் வருகிறார். அக்டோபர் 26 பச்சையப்பாஸ் ஹாலில் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். மதராஸ் மகாணத்தின் தலைநகராகவும் அந்த பிராந்தியத்தின் வணிக, அரசியல் மையமாகவும் விளங்கிய மதராஸ்தான் நேட்டால் பிணைத்தொழிலாளர்கள் பலருக்கும் சொந்த ஊர் என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை. 


தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒரு லட்சம் பிரிட்டிஷ் இந்தியர்கள் சார்பாக நான் உங்களிடம் முறையிட்டுக் கொள்ளவே வந்திருக்கிறேன் என்று தொடங்குகிறார்.. 

1) 

Monday 14 June 2021

Sunday 13 June 2021

மிலியின் சகோதரன்

 

அன்று மோகன்தாஸ் காந்தியை கைது செய்திருந்தார்கள். 1908 ஆம் ஆண்டின் அந்த ஜனவரி பத்தாம் நாளன்று ஜோஹானஸ்பர்க்கின் ஃபோர்ட் பிரிசன் சிறையில் அவரை உடைகளை களையச்செய்து உடல் எடை பார்க்கப்பட்டு அவரது விரல் ரேகைகள் பதியப்பட்டன.  பிறகு அவருக்கு சிறைக்கான உடைகள் அளிக்கப்பட்டபோது பொழுது நகர்ந்து மாலையாகியிருந்தது. இரவு உணவுக்காக எட்டு அவுன்ஸ் ரொட்டி கொடுத்து அவரை சிறையறைக்கு அனுப்பியபோது இலண்டனில் சட்டம் பயின்ற அந்த பாரிஸ்டருக்கு அது முன்பின் அறியாத புதிய அனுபவமாகவே இருந்தது. அவரை தவிர அவ்வறையில் பனிரெண்டு கைதிகள் இருந்தனர். அவர் கையோடு எடுத்துச்சென்றிருந்த பகவத்கீதையையும் டால்ஸ்டாய், சாக்ரடீஸ் ரஸ்கின் ஆகியோரின் புத்தகங்களையும் தம்மருகே வைத்துக் கொண்டார். இரவுணவுக்கு பின் மரப்பலகை படுக்கையில் படுத்துக் கொண்டார்.

 

டிரான்ஸ்வால் அரசாங்கம் கொண்டு வந்த புதிய ஏசியாட்டிக் அவசரச்சட்டத்தின்படி அங்கு வசிக்கும் இந்தியர்கள் அரசாங்கத்திடம் புதிதாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பதிவுச்சான்றிதழை எந்நேரமும் தம்மோடு வைத்திருக்க வேண்டும் என்றும்  பதிவுச்சான்றிதழ் இல்லாதவர்கள் கைது செய்யப்படவோ டிரான்ஸ்வாலுக்கு வெளியே அனுப்பப்படவோ வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எதிராக செப்டம்பர் 11 ஆம் தேதி எம்பயர் தியேட்டரில் தெளிவான, தீவிரமாக, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால், அவரசச்சட்டத்தின் கசப்பான, கொடுங்கோலான பிரிட்டிஷ் இயல்புகளுக்கு மாறான உத்தரவுகளுக்கு கீழ்படிவதை விட டிரான்ஸ்வாலிலிருந்த ஒவ்வொரு இந்தியரும் சிறைவாசத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பின்னணியில் நடந்த தொடர் போராட்டம் மோகன்தாஸுக்கு ஏராளமான ஆதரவாளர்களையும் சிறை தண்டனையும் பெற்று தந்திருந்தது. 

ஆடல்

 

டெல்லி நகரின் அந்த மாலைநேரம், பகல் நேரத்தில் தலைக்காட்டிய வெதுவெதுப்பு மறைந்து குளிருக்குள் நுழைந்துக் கொண்டிருந்தது. யமுனை நதியை தொட்டு மேலெழுந்தக்காற்று நகரை மேலும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. சற்றுமுன்பு வரையிலும் தெய்வீகத்தை உணர வைத்துக் கொண்டிருந்த பிரார்த்தனைக்கான மேடை தன் புனிதத்தைத் தொலைத்திருந்தது. இசைக்கருவிகள் இசைப்பாரும் கேட்போருமின்றி கிடக்க, ஒலித்தக்குரல்களில் பதற்றமும் அழுகையும் தொற்றியிருந்தன. நடைப்பாதையை அடுத்திருந்த புல்வெளிகள் நடந்த துயரை ஏந்திக் கொள்ளவியலாமலும் நகரும் வழியின்றியும் திகைத்திருந்தன. தலைக்கு மேலாக கவிழ்ந்திருந்த நீலவானத்தில் சிறு மேகக்கூட்டமொன்று திட்டாகக் குவிந்திருந்தது. 



ரொட்டியும் கல்லும்

அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான அலங்கரிப்பில் சிறப்பாக ஒளியூட்டப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் படங்கள் இருந்த சட்டகங்களிலெல்லாம் தேசியக்கொடிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சபையின் விசேஷக்கூட்டத்திற்கு முன்னதாக இரவு பதினோரு மணிக்கு வந்தேமாதரம் பாடலுடன், சுதந்திரப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செலுத்தப்பட்ட இரண்டு நிமிட அஞ்சலிக்கு பிறகு விழா தொடங்கியிருந்தது. பாடலுக்கும் கொடி வழங்கலுக்குமிடையே நடந்த சொற்பொழிவுகளின் இறுதியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உணா்ச்சிப்பூர்வமாகவும் சொல்நயம் மிக்கதாகவுமான உரையாற்றினார். 




பதினேழு ஆண்டுகளுக்கு முன்பும் இம்மாதிரியான கொண்டாட்ட நிகழ்வு நடந்திருந்தது. அது தேசியவாதிகளின் கனவுகளுக்கு தீவிர வேகம் கொடுப்பதோடு பிரிட்டிஷாரை அதிகாரத்தை கைவிட வற்புறுத்தும் நோக்கில் சுயராஜ்ஜியம் அல்லது முழுமையான சுதந்திரம் என்ற கோரிக்கையை முன் வைத்து லாகூரில் நடைப்பெற்ற காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அம்மாநாட்டில்தான் நேரு, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அறிவுத்திறனும் நாவன்மையும் அந்நிய விவகாரங்கள் குறித்த ஞானமும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தன.