Search This Blog

Thursday 12 October 2023

முதற்கனல் – பெருநாவலின் முதற்பொறி

 

 அஸ்தினபுரியின் மீது நெருப்பு பொறி வந்து விழுகிறது. ஏன்… எதனால்.. காதலினாலா? காமத்தினாலா? துரோகமா? சினமா? அல்லது மண்ணாசையா? எதன் பொருட்டு கனல் அஸ்தினபுரியை அவியாக்கிக் கொள்ள எண்ணுகிறது? ஒரு அநீதியான அரசியல் செயல்பாடுதான் இதன் தொடக்கம். அது தனிமனிதரொருவரின் கடமையுணர்விலிருந்து உருவானதா? தந்தையின் மீதான அவரின் பெருவிருப்பத்தாலா? அவ்விருப்பமே தந்தை இறந்து விட்ட போதிலும் அவரது ஆசை மனைவியான  சின்னம்மையின் வாக்கை வேதமென்று கருத வைத்ததா? எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் அந்த பேரரசியிடம் உள்ளதென்று நம்பும் மனத்தை கொள்ள வைத்ததா? அல்லது தன் தந்தையின் நாடு தக்க வாரிசின்றி பிறிதொருவருக்கு உடமையாகி விட கூடாது என்ற தன்னுணர்வா? எந்த எண்ணம் அவரை வெற்றிக் கொண்டிருந்தாலும் அவர் மேற்கொண்ட நியாயமற்ற செயல்தான் இதன் முதற்சுழி. 

தந்தையின் காமத்துக்காக தன் அரச நிலையையும் காமத்தையும் துறந்த பீஷ்மர் என்னும் பெருமனிதர் ஷத்திரிய நியாயத்தை கையிலேந்தி அதில்  காசி நாட்டின் மூன்று இளவரசிகளை பலவந்தமாக அமர வைத்து நோயாளியான தங்கள் நாட்டு இளவரசனுக்கு மணமுடிப்பதற்காக சிறைப்பிடித்துக் கொண்டு வருகிறார். அஸ்தினபுரியின் ஸ்திரத்தன்மைக்காக அவரது சிற்றன்னையான சத்யவதியின் பின்களமாடலுக்கு செயல்வடிவம் கொடுக்க ஷத்திரிய தர்மம் அவரை அனுமதித்ததை போல அந்த அநீதியினுள் தொலைந்துப் போன மானுட தர்மம் அல்லது அறப்பிழல் அவரை அனுமதிக்கவில்லை. அது எரிதழலென அஸ்தினபுரியின் மீது விழுகிறது. அதன் கதையைதான் முதற்கனல் பேசுகிறது. இதுவே பக்க எண்ணிக்கைகளாலும் கிளைக்கதைகளாலும் மூலக்கதையமைப்பாலும் பகவத்கீதை என்ற நெறிநுாலாலும் கட்டமைக்கப்படவிருக்கும் வெண்மையான முரசின் முதலாவதான நாவல். 

விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் சிறுகதைகள் குறித்த கட்டுரை

இளம் வயதிலிருந்தே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அந்த ஆர்வம்தான் கதை சொல்லும் ஆசையாக உருமாறி இருக்கிறதோ என்னவோ -  கவிஞர் யுவன் தன் சிறுகதைத்தொகுப்பொன்றின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவதை குறித்து வைத்துக் கொள்வோம்.




பொதுவாக மேலுள்ளம் புறவாழ்க்கையோடு எப்போதும் தொடர்பிலிருந்துக் கொண்டேயிருக்கும். கூடவே ஆழுள்ளம் அதுவாகவே இயங்கி கொண்டிருக்கும். இவ்விரண்டுக்குமான தொடர்புகளின் விகிதாச்சாரங்களே மனிதனின் குணாதிசயத்தை முடிவு செய்கிறது. ஆழுள்ளத்தின் சன்னமான குரல்களை அழுத்தமானதான ஆக்கும் வகைப்பாட்டுள் ஒன்றுதான் எழுதிப்பார்ப்பது. ஆகவேதான் எழுத்து எதை சொல்ல வேண்டும், எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று வரையறைப்படுத்தப்படும்போது அதற்குள் எழுத்தாளரால் இயங்க முடிவதில்லை. வரையறைக்குட்படும்போது அது ஆற்றொழுக்கானதாக இருந்து விடவும் முடியாது. ஒரு கருவை எழுத்தாக்கும்போது ஆழுள்ளம் மேலெழும்புகிறது. சொல்லப்போனால் கதைக்கான கருக்களை ஆழுள்ளமே முடிவு செய்கிறது. புறநிகழ்வுகள் நினைவுகளாக படியும்போது, ஆழுள்ளம் நமக்கு விருப்பமானவற்றை ஒருபுறமாக அடுக்கி வைத்துக் கொள்கிறது. நிறைவேறாத இவ்விருப்பங்கள் சிலசமயம் உக்கிரமாகவும் வெளிப்படுவதுண்டு. போலவே மறுவினையற்றும் முடிந்து விடுவதுமுண்டு. அதேசமயம் அடக்கவியலாத ஆதங்கம் கனவுகளாக வெளிப்படவும் வாய்ப்புண்டு. ஆனால், கிருஷ்ணன் அவர்களுக்கு சட்.. யுவன் அவர்களுக்கு எழுத்தாக வெளிப்படுவதோடு நிறைவுக் கொள்ளாமல், கனவாகவும் அது தொடர்கிறது. அதையும் அவர் கதையாக்குகிறார்.

Sunday 14 May 2023

யாவரும்.காம் ஏப்ரல் 2023 இணைய இதழில் வெளியானது.

னது நிலம் என்பது எது? சொந்த நிலமென்று எதை சொல்வது? பூர்வீகம் என்று எங்கோ ஒன்றிருப்பதையா? சூழ்நிலையின் பொருட்டு தாயாரின் பிறந்த வீட்டிலோ தந்தையாரின் ஊரிலோ பிறந்து விடுவதையா? வளரும் சூழலில் வேலைநிமித்தமோ வேறு எந்த நிமித்தமோ குடியேறி கொள்ளும் இடத்தையா? திருமணமாகி சென்று சேரும் ஊரையா? அவரவர் வாங்கும் திறனுக்கேற்ப கிடைக்கும் யாரோ ஒருவரின் முன்னாள் வயற்காடு அல்லது ஏதோ ஒரு ஊரின் முன்னாள் சுடுகாடு அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நீர்நிலை அல்லது ஏமாற்றி தலையில் சுமத்தப்பட்ட அரசாங்க புறம்போக்கு என்றிருக்கும் பூமியில் வீடு கட்டிக்கொண்டு காலம் முழுதும் கடனை சுமக்க வைக்கும் தற்போதைய வாழ்விடத்தையா? எதை நமது நிலமென்பது? உடைமை கொண்டதெல்லாம் பிடித்தமானதாகி விடப்போவதில்லை. உரிமை இல்லாததன் மீது பிரியம் வராது என்பதை சொல்வதற்குமில்லை.

Thursday 20 April 2023

ருட்டியாகிய நான்…

 'தமிழ்வெளி' ஏப்ரல் 2023 வெளியீடு



ருட்டி வெகு உரிமையாக படுக்கையில் தன்னருகே சாய்ந்து கொண்ட ஷப்புர்ஜியின் மெத்தென்ற கழுத்தை மிக மென்மையாக வருடினாள். அது கழுத்தை மேலும் வாகாக்கி கொண்டு அவளின் இளஞ்சூடான ஸ்பரிசத்தில் மெய்மறந்து கொண்டிருந்தது. கோபத்தோடு தங்களையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த ஃபிடோவை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “கமான் ஃபிடோ…” என்றபோது காத்திருந்தது போல அவளிடம் ஓடி வந்தது. அவளிடம் யார் முதலில் செல்வது என்ற ஆர்லெட்டுக்கும் ஃபிடோவுக்குமான வழக்கமான சண்டையில் ஆர்லெட் வழக்கமற்று தோற்க, அந்த எரிச்சலில் அவள் காலடியில் படுத்துக் கொண்டு மீசைக்குள்ளிருந்த தன் அரும்பு வாயை திறந்து மியாவ்... என்றது ஆர்லெட்.

Tuesday 28 February 2023

ஹரிலால் s/o மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாவல் குறித்து

இலக்கிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் விமர்சனக் கட்டுரை



மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே......

கலைச்செல்வி திருச்சியில் அரசுப் பணியில் இருப்பவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் வெளியாகியுள்ளன. வேறொரு நாவலுக்குக் காந்தி குறித்த தகவல்கள் சேகரித்தபோது, ,காந்தி இவரை சிக்கென பற்றிக்கொண்டதால் உருவான முழுநாவல் இது.

kristin Hannahவின் Masterpiece ஆன Nightingaleக்கும் இந்த நாவலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே, வேறு நூலுக்கான ஆராய்ச்சியின் போது கிடைக்கும் தகவல்கள், புதிய நாவலுக்கு தூண்டுகோலாக அமைவது. Historical fiction எழுதுவது என்பது எளிதான விசயமல்ல. அதுவும் இந்தியா போன்ற Dataவில் குறைபாடு கொண்ட தேசத்தில் சரித்திர நாவல்கள் என்பது எப்போதுமே சவால் தான்.

கூடு

எழுத்தாளர் அம்பை அவர்களின் விமர்சனக்கட்டுரை 



Life and Forests, Rivers and Hoopoe Birds

Title: Koodu&PiraKadhaigal(Nest& Other Stories)

Author: Kalaiselvi Publisher: Yaavarum Publishers, ChennaiYear: 2021

No. of Pages: 160 Price: Rs.190 

This is the fifth short story collection of Kalaiselvi whose stories delve deep into the inner minds of people to bring out the complex lives they live through spoken words and through silences. Taking the stories on non-linear paths often through forests which become a metaphor in her stories to depict the unpredictability and complexity of human relationships, Kalaiselvi has arrived at a unique style of storytelling. Many of her stories end with hidden doors for the readers to go through and see beyond the stories.  This sixth collection of stories is no exception. 

கூடு

இலக்கிய விமர்சகர் திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்களின் “கூடு' சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கட்டுரை.

சக்கை,புனிதம்,அற்றைத்திங்கள் என்ற நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை வெளியிட்டுள்ள இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு "கூடு"



கூடு காடுறை மக்களின் கதை. மகாஸ்வேதா தேவியின் கதைகளின் நீட்சி. அவனுக்கு பெயர் இல்லை. சிறுவன் வலிமைமிகு வாலிபன் ஆகிறான். பின் தலைவனுமாகிறான். காடு குறித்த பல தகவல்கள் தாண்டி இந்த மொழிநடை காட்டுக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. ஆணாத்தி பெண்ணாத்தி பற்றிய ஒருபத்தி விவரிப்பில் சோகம் உங்கள் மீதும் கவிந்து கொள்கிறது. கையறு நிலையை கதைசொல்லி அவன் கையிலிருந்து வாசிக்கும் உங்கள் கைக்கு மாற்றிவிடுகிறான்.