Search This Blog

Saturday 15 September 2018

வார்ப்புகள் (சிறுகதை)

மணல்வீடு செப்டம்பர் 2018 இதழில் வெளியானது.


பலகைபோல அகலமும் வார்த்தெடுத்தது போன்ற பொலிவுமாக வரைவதற்கு தோதாக இருந்தது அந்த கருங்கல். வரைவது அவளுக்கு பிடித்தமானது. சிமிண்ட்கல்லை கூராக்கி கருங்கற்களில் அவள் வரைந்த ஓவியங்கள் ஓடைக்கரையெங்கும் நிரம்பிக் கிடந்தன. அவற்றில் பெரும்பான்மை மலை.. கிராமம்.. அவளின் வீடு.. அம்மா.. அம்மாவைப் பெற்ற பாட்டி.. இரண்டு தம்பிகள் என்றிருக்கும். வரைவது எதுவாயினும் அவற்றின் முகப்போ, முகமோ புசூருவை ஒத்திருக்கும்.

பட்டுவாடா (சிறுகதை)


பதாகை ஆகஸ்ட் 2018ல்  வெளியான சிறுகதை


அவனுடையது ஓடைக்கரையில் அமைந்த பசுமையான மலையடிவார கிராமம். தன் வயதொத்த இளைஞர்களோடு ஓடை நீரில் பாய்ந்து குதித்து விளையாடுவதும், அவ்வப்போது சினிமாவும், சனியன்று கூடும் சந்தையில் பெண் பிள்ளைகளை மறைந்திருந்து பார்த்து பரவசமடைவதையும் தற்போதைய பொழுதுப்போக்குகளாய் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் இந்த மரணம் எதிர்பாராத ஒரு கையறு நிலை.