மணல்வீடு செப்டம்பர் 2018 இதழில் வெளியானது.
பலகைபோல அகலமும் வார்த்தெடுத்தது
போன்ற பொலிவுமாக வரைவதற்கு தோதாக இருந்தது அந்த கருங்கல். வரைவது அவளுக்கு பிடித்தமானது.
சிமிண்ட்கல்லை கூராக்கி கருங்கற்களில் அவள் வரைந்த ஓவியங்கள் ஓடைக்கரையெங்கும் நிரம்பிக்
கிடந்தன. அவற்றில் பெரும்பான்மை மலை.. கிராமம்.. அவளின் வீடு.. அம்மா.. அம்மாவைப் பெற்ற
பாட்டி.. இரண்டு தம்பிகள் என்றிருக்கும். வரைவது எதுவாயினும் அவற்றின் முகப்போ, முகமோ
புசூருவை ஒத்திருக்கும்.