Search This Blog

Monday 21 August 2017

தளம் ஆகஸ்ட் 2017ல் வெளியான “இவள பிடிக்கல..“ கதைக்கு தோழர் கண்மணிராசாவின் விமர்சனம்

தளம் இதழ் எண் 17&18 ல் வந்துள்ள கலைச்செல்வியின் 
"இவள பிடிக்கல..." சிறுகதை வெகுசிறப்பாக வந்துள்ளது.இக்கதையை நிச்சயமாக ஒரு ஆணினால் எழுதமுடியாது.வாடகைத் தாயாக இருக்கநேர்ந்த ஒரு ஏழைப்பெண்ணின் மனம் படும்பாட்டை வலியோடு பதிவுசெய்யும் கதை.ஆனால்....அப்பெண்ணின் கணவன் வார்த்தைகளிலயே இத்துயரத்தை பதிவிட்டுள்ளார்.குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு பத்துமாதம் கழித்து வந்தவளிடம் இவளின் வீட்டிலிருக்கும் குழந்தைகள் ஒட்டாமல் அந்நியமாய் பார்க்கின்றன.இந்த வேதனையோடு பெற்றவுடன் தூக்கிக்கொடுத்துவிட்டு வந்த பிஞ்சின் நினைவும் மனதில் பாரமேற்ற தனககுள்ளே அழுது மருகுகிறாள்.கணவனுக்கோ வேறுவேறான சந்தேகங்கள்.....எல்லாவற்றையும் நுட்பமாக கணவனின் வாயினாலேயே கதையாட வைத்துள்ளார்...
நாம் புரிந்துகொள்ளமுடியாத பெண்மனதை தன் கதைகளின் பதிவுசெய்வதில் கனலச்செல்வி வாகைசூடுகிறார்.
வாழ்த்துக்கள் தோழர்.

No comments:

Post a Comment